Monday, November 11, 2019

TIRUVALLUVAR IN THE EYES OF ANCIENT TAMIL POETS

Tiruvalluvar in the eyes of ancient  Tamil Poets is  an eminent great Poet of the highest order. His precious work Tirukkural has been compared by them to the Vedas which  are intended for the benefit of entire humanity.
The following excerpts from Tiruvalluva  Malai present the true picture of  the greatness of Tiruvalluvar and his immortal contribution Tirukkural  based on ancient dharma as prevalent in those days in accordance with Vedic Scriptures:-

திருவள்ளுவ மாலை

உக்கிரப்பெரு வழுதியார்.

4. நான்மறையின் மெய்ப்பொருளை முகப்பொருளா நான்முகத்தோன்
றான்மறைந்த வள்ளுவனாய்த் தந்துரைத்த - நூன்முறையை
வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்னெஞ்சஞ்
சிந்திக்க கேட்க செவி.

பரணர்

6. மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியான்
ஞால முழுது நயந்தளந்தான் -வாலறிவின்
வள்ளுவருந் தங்குறள்வெண் பாவடியால் வையத்தா
ருள்ளுவ்வெல் லாமளந்தா ரோர்ந்து.

கோதமனார்

15. ஆற்ற லழியுமென் றந்தணர்க ணான்மறையைப்
போற்றியுரைத் தேட்டின் புறத்தெழுதா--ரேட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினு மாற்றல்சோர் வின்று.

நல்கூர்வேள்வியார்

21. உப்பக்க நோக்கி யுபகேசி தோண்மணந்தா
னுத்தர மாமதுரைக் கச்சென்ப-இப்பக்க
மாதாநு பங்கி மறுவில் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு

வெள்ளிவீதியார்

23. செய்யா மொழிக்குந் திருவள் ளுவர்மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே-செய்யா
வதற்குரிய ரந்தணரே யாராயி னேனை
யிதற்குரிய ரல்லாதா ரில்

மாங்குடி மருதனார்

24. ஓதற் கெளிதா யுணர்தற் கரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோ
ருள்ளாதோ றுள்ளுதோ றுள்ள முருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்

28. ஐயாறு நூறு மதிகார மூன்றுமா
மெய்யாய வேதப் பொருள்விளங்கிப் - பொய்யாது.
தந்தா னுலகிற்குத் தான்வள் ளுவனாகி
யந்தா மரைமே லயன்.

பாரதம் பாடிய பெருந்தேவனார்

30. எப்பொருளும் யாரு மியல்பி னறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாஞ் செப்பவரு - முப்பாற்குப்
பாரதஞ்சீ ராம கதைமனுப் பண்டைமறை
நேர்வனமற் றில்லை நிகர்.

கவிசாகரப் பெருந்தேவனார்

36. பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புனத
மாவிற் கருமுனியா யானைக்- கமரரும்பல்
தேவிற் றிருமா லெனச்சிறந்த தென்பவே
பாவிற்கு வள்ளுவர்வெண் பா.

மதுரைப் பெருமருதனார்

37. அறமுப்பத் தெட்டுப் பொருளெழுப தின்பத்
திறமிருபத் தைந்தாற் றெளிய - முறைமையால்
வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனா
ரோதவழுக் கற்ற துலகு.

जय जय श्रीराधे